search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை பெண் மரணம்"

    செங்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகேயுள்ள பூலாங்குடியிருப்பு கரிகாலன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி முப்பிடாதி. இவர் அப்பகுதியில் ஒரு வீட்டில் குடிநீர் பிடிக்க சென்றார். அப்போது மின் மோட்டார் இயங்கிக்கொண்டிருந்தது.

    எதிர்பாராதவிதமாக முப்பிடாதி தண்ணீர் பிடித்தபோது தவறி மின் மோட்டாரில் விழுந்துவிட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட முப்பிடாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×